போற்றிடு ஆன்மமே
1. போற்றிடு ஆன்மமே சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.
2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார், ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார், ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.
3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை:
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணளை:
பேரன்பராம், பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணளை:
பேரன்பராம், பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;
ஏற்றிடும்
கர்த்தரை ஜீவ இ-ராசிகள் யாவும்;
சபையாரே,
சேர்ந்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.
No comments:
Post a Comment